Tamil – நவீீன இந்தியாவின் தந்தை: வில்லியம் கேரி
இந்துத்துவா சொல்வது சரிதான்: நவீன இந்தியா இந்துத்துவத்திலிருந்து தோன்றியதல்ல. அதனால் தான் மரபுவழி இந்துக்கள் அதனை சனாதன தர்மத்துடன் பொருந்தாததாகக் காண்கின்றனர். வில்லியம் கேரி இந்தியாவின் ஆன்மாவுக்குள் விதைத்த ஒரு புத்தகம், காந்தி, நேரு, அம்பேத்கர் ஆகியோரின் இருதயத்தை தாக்கியது; அதனால் அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களை உயர்த்த முனைந்தனர். பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி, முகலாயர்கள், மராத்தியர்கள், மன்னர்கள் ஆகியோருடன் போராடியது தன் வருமானத்தைப் பாதுகாக்கவும் வளர்க்கவும் மட்டுமே. வாய்வழி பேசப்படும் வட்டார மொழிகளை இலக்கிய மொழிகளாக்குவதில் அவர்களுக்கு எந்த ஈடுபாடும் இல்லை. “கீழ்சாதி” மக்களுக்கு கல்வி கற்பித்து, அவர்களை பிராமணர்களைப் போல் பண்டிதர்களாகவோ, மன்னர்களைப் போல் ஆட்சி செய்யவோ, வணிகர்களைப் போல் வியாபாரிகளாகவோ மாற்ற கொஞ்சம் கூட ஆர்வம் காட்டவில்லை. ஆனால் வில்லியம் கேரி போன்ற தன்னலமற்ற மிஷனரிகளே, தொலைநோக்குடன், கடும் பாடுபட்டு, நவீன இந்தியாவின் அடித்தளத்தை அமைத்தார்கள். ஏனெனில், “தேவன் இந்தியாவை நேசிக்கிறார்; தனது ஒளியால் அதை ஆசீர்வதிக்கத் தீர்மானித்துள்ளார்,” என்று வேதம் சொல்லுவதை நம்பினார்கள்.
AI Readiness
Good foundation, but some important product data is still missing.